Thursday, June 17, 2010

ஆரம்பம் - விண்வெளியைப் பற்றிய முதல் பகுதி

இந்த வானம் எப்பொழுதும் இப்படியே இருந்திருக்கிறதா, இதற்கு ஏதேனும் ஒரு ஆரம்பம் உண்டா, எப்படி ஆரம்பமாயிற்று, எப்பொழுது ஆரம்பம் ஆனது, யார் இதை தோற்றுவித்தார் இவை எல்லாமே முக்கியமான கேள்விகள் .


இந்த உலகம் அதாவது இந்த வானம் 14.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஒரு பில்லியன் என்பது நூறு கோடி. அதாவது இந்த உலகம் தோன்றி 1450 கோடி ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆரம்பமாவதற்கு முன்னால் என்னதாக இருந்தது என்பது இதுவரை அறியப்படவில்லை. பல யூகங்கள். ஒன்றுமில்லாததாக இருந்ததிலிருந்துதான் எல்லாமே வெளிப்பட்டிருக்கிறது. Everything came from Nothing. இதை முழுமையாக விஞ்ஞானிகள் நம்ப மறுக்கிறார்கள்.

நமது இயற்பியலின் விதிகள் (Laws of Physics) எல்லாமே இந்த உலகம் தோன்றிய பின்னே உள்ள நிலைக்குதான் சரியாக வரும். தோன்றுவதற்கு முன்னே கால நேரம், இடைவெளி அல்லது இடம் என்பது கிடையாது. அதாவது உலகம் தோன்றுவதற்கு முன்னால் இந்த வானமும் கிடையாது, நேரம் என்பதும் கிடையாது.

ஒரு குறிப்பிட்ட சமயத்தில், அதாவது 1450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில் (எதிலிருந்து என்பது இன்னமும் கேள்விதான்) ஏற்பட்டதுதான் இந்த உலகம். இந்த நிகழ்வை Big Bang என்று கூறுகிறார்கள். எதோ ஒன்று வெடித்து சிதறி, துண்டு துண்டாக அங்கங்கே விழுந்த கற்கள்தான் இன்று நாம் காணும் பல்வேறு கோள்கள், நட்சத்திரங்கள், சூரியன்கள், பால் வெளிகள், மற்றும் பல உலகங்கள்.

நமது இந்திய மூதாதையர்கள் இதை தத்துவபூர்ணமாக உணர்ந்திருக்கிறார்கள். "எல்லாமே ஒன்றிலிருந்துதான் தோன்றியிருக்கிறது, தோன்றுவதற்கு முன்னாலேயும் சரி, தோன்றியதற்கு பின்னாலேயும் சரி அது பூரணமாகவே இருந்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்கள். தோன்றுவதற்கு முன்னால் இருந்த நிலையை இன்று விஞ்ஞானிகள் Singularity என்று கூறுகிறார்கள். Singularity என்பது என்ன, எப்படி இருந்தது, அதன் தன்மைகள் என்ன என்பது பற்றி ஆராய்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆராய்ச்சி முழுமை அடையும்பொழுது நமது எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.

இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னால் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் உலகம் தோன்றுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் அதனுள்ளேயே அடங்கிக் கிடந்திருக்கிறது. Singularity could just have been a field of All Possibilities. இதையேதான் நமது புராணங்களில், "ஆயிரம் தலைகளைக் கொண்டவர், ஆயிரம் கைகளைக் கொண்டவர், முடியாதவர், பிளந்து நிற்பவர், அணுவுக்குள் அணுவாய் இருப்பவர்' என்றெல்லாம் பலவிதமாக அந்த Singularity என்பதைப் பற்றி கூறியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இந்த Big Bang ஏற்பட்ட நேரத்தில் பல நூறு கோடி டிகிரி வெட்பம் உண்டாகியிருக்க வேண்டும். அந்த வெட்பத்தில் முதன் முதலில் ஹீலியம் என்ற ஒரு வாயுப் பொருள் மட்டுமே தோன்றி, பிறகு அந்த வெட்பத்தில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தில் ஹைட்ரஜன் வாயுவும் உண்டாகியிருக்கிறது. இது உலகம் தோன்றிய நேரத்திலிருந்து ஒரு வினாடிக்கும் மிகக் குறைவான நேரத்தில் ஏற்பட்ட இந்த விளைவு.

வெட்பம் இப்படியாக கூடும் பொழுதும் குறையும் பொழுது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்து வேறு பல வாயு, மற்றும் திடப் பொருட்களும் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது .

அணுக்கள் பிரியும் பொழுதும் கூடும் பொழுதும் பல லட்சக்கணக்கான டிகிரி வெட்பம் உண்டாகும். பிறகு வெட்பம் குறைந்து குளிரத் தொடங்கும். இப்படி மாறி மாறி வெட்பமும் குளிரும் தோன்றும் பொழுது பல பல உலோகங்கள் தோன்றியிருக்கின்றன.

இந்த உலோகங்களின் கூட்டு கலவைதான் இன்று நாம் பார்க்கும் பல கோள்கள்.

No comments:

Post a Comment