Sunday, May 9, 2010

உன்னை அறிந்தால் ....

"உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காது
நீ வாழலாம்."

இது ஒரு பழைய எம்.ஜி. ஆர் படப்பாடல் . எழுதியவர் யார் என்பது இப்ப்பொழுது எனக்கு மறந்து விட்டது. 'வேட்டைக்காரன் ' படம் என்று ஞாபகம் . இப்பொழுதும் பழைய எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல்கள் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். கேட்பதற்கும் இனிமையாக இருக்கும்.

"உன்னையே நீ எண்ணிப்பார்." என்பது ஒரு பழைய படத்தின் வசனம். 'சாக்ரட்டீஸ்' கதையை நாடகமாகக் காட்டும் ஒரு காட்சியில் தோன்றும் வசனம். உன்னையே நீ உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே மனிதனுக்குத் தோன்றிய எண்ணம்.

உன்னை நீ அறிந்துகொள்வது என்பது மிகவும் முக்கியம்.

'நான் யார் நான் யார் நான் யார் ' என்பது இன்னொரு எம்.ஜி.ஆர் பட பாடல் . 'நான் என்பது யார்?' என்பது ஒரு முக்கியமான கேள்வி. 'நான்' என்பது என்னுடைய உடம்பா, இந்த மனமா, எனது மூளையா, எனது எண்ணங்களா?

இதைப்பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் 'நான் யார்' என்பதை தெரிந்து கொள்ளாததினால் தான் இன்று நமக்கு பல பிரச்சினைகள்.
இதைப்பற்றி நாம் மீண்டும் சந்திக்கும்பொழுது விவரமாகப் பேசலாம்.

No comments:

Post a Comment