Saturday, May 15, 2010

சர்தார்ஜி ஜோக்ஸ்

ஐரோப்பா சுற்றி விட்டு நாடு திரும்பிய சர்தார்ஜி தன் மனைவியிடம் கேட்டார்: "என்னைப் பார்த்தால் ஒரு வெளி நாட்டுக்காரர் போலவா தெரிகிறது?"
"இல்லையே!" என்றார் மனைவி.
"பின்னே எப்படி, லண்டனில் என்னைப் பார்த்து ஒரு பெண்மணி 'உங்களைப் பார்த்தால் வெளிநாட்டுக்காரர் போலத் தெரிகிறதே' என்றாளே?"
********
பஞ்சாப் வந்திருந்த அமெரிக்கர் ஒருவர் சர்தார்ஜியிடம் கேட்டார்: "இந்த ஊரில் பெரிய மனிதர்கள் யாரேனும் பிறந்திருக்கிறார்களா?"
"இல்லையே, இங்கே சின்னக் குழந்தைகள்தானே பிறந்திருக்கின்றன!!!" என்றார் சர்தார்ஜி.
*******
எனக்கு கிடைத்த சர்தார்ஜி ஜோக்குகளில் மென்மையானவை என்ற இரண்டை மேலே கொடுத்திருக்கிறேன். பெரும்பாலும் பல நேரங்களில் சர்தார்ஜி ஜோக்குகளை நமக்குள் பகிர்ந்துகொண்டு சிரித்திருக்கிறோம். அவர்களை சில நேரங்களில் கேலியும் செய்திருக்கிறோம். சர்தார்ஜிகளே கூட அவர்களைப் பற்றிய ஜோக்குகளை ரசித்திருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னாள் எதோ ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம். ஒரு கணவன் மனைவி வடக்கே எங்கேயோ டாக்சியில் போய்க்கொண்டிருந்தபோது தங்களுக்குள் தமிழில் பல சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லி சிரித்துக்கொண்டிருந்தனராம். இவ்வளவுக்கும் வண்டியை ஓட்டியவர் சர்தார் என்பதையும் மறந்து சிரித்திருக்கின்றனர். அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், சர்தார்ஜி டிரைவர் இவர்களை பார்த்து சொன்னாராம்: "நீங்கள் சொல்லிக்கொண்ட பல
ஜோக்குகளை நானும் ரொம்பவும் ரசித்தேன். நன்றாக இருந்தது. எனக்கு ஒரு சிறிய உதவி பண்ணுங்கள். இதோ ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை நான் உங்களுக்கு தருகிறேன். நீங்கள் பல இடங்களுக்கு ஊர் சுற்ற போகிறீர்கள் என்று நினைக்கிறேன். எங்கேனும் ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரரைப் பார்த்தால் இந்த ஒரு ரூபாயை அவருக்குக் கொடுத்து விடுங்கள்." என்று.
அந்த கணவன் மனைவி பல இடங்களுக்கு வட
இந்தியாவில் சுற்றிவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரு ரூபாயை எவ்வளவு தேடியும் ஒரு சர்தார் பிச்சைக்காரரிடம் கொடுக்க முடியவில்ல. அவர்கள் கண்களில் ஒரு சர்தார் பிச்சைக்காரர் கூட அகப்படவில்லை.
பல வருடங்களுக்கு பிறகும் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பாதுகாத்து வருவதாக எழுதியிருந்தார்கள். அவர்கள் கண்களில் இன்னும் ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர் கூட அகப்படவில்லை.
சர்தார்ஜிகளைப் பற்றி அவர்கள் ஜோக்குகள் சொல்லி சிரித்துக்கொண்டதைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள். சர்தார்ஜிகள் மானஸ்தர்கள். பிச்சை எடுப்பதைவிட எதோ ஒரு தொழிலைப் செய்துகொண்டு மானத்தோடு வாழ்பவர்கள்.
*******
நமது தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் எங்கு பார்த்தாலும் பிச்சைக்காரர்களைப் பார்க்கலாம். நமக்கு மட்டும் ஏன் இந்த ஈனப் பிழைப்பு? நமக்கும் தன் மானம் இருக்கிறதுதானே?


No comments:

Post a Comment